Sunday, October 11, 2009

என்ன செய்வது

நான் மனனம் செய்யும்
அறிவாளியாக பிறந்திருக்க வேண்டும்-இல்லையேல்
ஏதும் தெரியாத
முட்டாளாக பிறந்திருக்க வேண்டும்-ஆனால்
யோசிக்கத் தெரிந்த
மனிதனாக பிறந்துவிட்டேன்
இப்படி பிறந்தது
கடவுளின் செயலே என்று
கடவுளைத் திட்டலாம் என்று பார்த்தால்
அதிகமாக யோசித்தால்
கடவுள் இல்லை என்ற
முடிவுக்கு வந்துவிட்டேன் என்ன செய்வது?

No comments:

Post a Comment