
அம்மாவிடம் பேசும்
எந்த உரையாடலும்
"சாப்பிட்டியா?" என்ற
வார்த்தை இல்லாமல் முடிவதில்லை
அப்பவிடம் பேசும்போது
பணம் பற்றி
பேசாமல் இருக்கவே
முடியாது
உறவினர்களுடன் இடையே
ஆன பேச்சு
நல விசாரிப்புகள் இல்லாமல்
இருந்ததில்லை
முத்தம் இல்லாமல்
என்றுமே காதலியிடம்
பேசி முடிக்க
முடியாது
"அப்புறம்" என்ற
வார்த்தை இல்லாமல்
நண்பர்கள் பேசியதாய்
வரலாறு கிடையாது
இப்படி நிலையான
பல வார்த்தைகள்
இருந்தாலும்
எல்லா உரையாடல்களும்
மௌனத்தில் தொடங்கி
மௌனத்தில்தான் முடிகின்றன..
No comments:
Post a Comment