Thursday, September 30, 2010

கவிதை குறித்த சொற்கள்


சிலரது கவிதைகளில்
அளவுக்கு அதிகமான
சொற்கள் குவிந்து
கழுத்தை நெரிக்கின்றன.

சிலரது கவிதைகளில்
தொடர்பில்லாத வார்த்தைகள்
வந்து அக்கவிதையை
யாருக்கும் புரியாத
பின்நவினத்துவ கவிதையாக்கும்
அபாயமும் இருக்கிறது.

இலக்கணக் கவிதையை
உருவாக்கும் முயற்சியில்
சொற்கள் கத்தரிக்கப்படும்
சோகமும் நடக்கத்தான் செய்கிறது.

சங்ககாலத்தில் இருந்து
தற்காலம் வரை
பல மாற்றங்களுக்கு
உட்பட்டு வரும்
கவிதையின் சொற்கள்
ஏனோ தான்
தாங்கிவரும் கருத்தில்
இருந்து மட்டும்
மாறவே இல்லை.

சிலர் கவிதைக்கான
சொற்களை செய்கிறார்கள்
சில சொற்கள்
கவிதை செய்கின்றன
ஆனால்
கவிதை செய்யும் சொற்களே
உண்மை கவிதையாகின்றன.

Wednesday, September 29, 2010

கவிதையின் கரு


உங்கள்
கவிதையின் கரு
எதுவாகவும் இருக்கலாம்

அம்மா தந்த காப்பியாக இருக்கலாம்
அப்பா பரிசளித்த பேனாவாக இருக்கலாம்
காதலி கொடுத்த முத்தமாக இருக்கலாம்
தோழியின் செல்ல திட்டுகளாக இருக்கலாம்
நெருங்கிய நண்பனின் மரணமாக இருக்கலாம்
என்றோ பார்த்த சினிமாவாக இருக்கலாம்
புதிதாய் பூக்கும் பூவாக இருக்கலாம்
இன்னொரு கவிதையாக கூட இருக்கலாம்
இல்லை என்றால்,
இக்கவிதையில் வருவது போல் சூன்யமாகவும் இருக்கலாம்.

Thursday, September 2, 2010

சண்டை


நான் யாருடன்
வெளியே செல்வது
என்று என்
தோழிக்கும் காதலிக்கும்
அடிக்கடி சண்டை நடக்கும்
ஜெய்ப்பது என்னவோ நான் தான்.