Saturday, June 2, 2012

மண்ணு கவிதைகள்


1

அழகிய
வண்ணமிகுந்த பறக்கும்-அந்த
பட்டாம்பூச்சியை பிடிக்க
ஆசைப்பட்டேன்.

பிடித்தேன்.

என் கையில் இருப்பது
அழகிய வண்ணமிகுந்த
பட்டாம்பூச்சி மட்டுமே...


2
இறந்த காலம் என்பதை
மனிதனைப் பார்க்கும் வரை
அந்த மலை
அறியவில்லை.
இப்போது எதிர்காலத்தை


3
"இன்னாருக்குச் சொந்தமான
நிலத்தில் யாரும்
அத்து மீறி நுழையக்கூடாது"
என்கிறது அந்த அறிவிப்பு.
யாரும் அத்துமீறி நுழையக்கூடாது
என்பதாலேயே அது
இன்னாருக்குச் சொந்தமாகிவிட்டது

4
நொடிக்கு ஒருமுறையாவது
இதயம் நோக்கி விரைகிறது
காற்று.
வெற்றிடத்தை காற்று நிரப்பும்.

5
நான் சுகமாக
படுத்திருக்கும் என்
படுக்கை நாளை
இன்னொருவனுக்குச் சொந்தம்
என்கிறான் அவன்.

எல்லோருக்கும்
சொந்தமான படுக்கையில்
நீ படுத்திருக்கிறாய்
என்கிறான் தாடிக்காரன்.

No comments:

Post a Comment