Sunday, March 14, 2010

ஒரு மழைத்துளியின் வேண்டுதல்



மேகம் ஒன்றில்
ஒட்டி நின்ற
மழைத்துளி வேண்டியது
மோட்சம் கேட்டு...

மேகம் உடைந்ததும்
ஒவ்வொரு துளியாய்
விழுந்தன,மண்நோக்கி...

கடலில் விழுந்து முத்தாகவேண்டும்
நதியில் விழுந்து நன்நீராக வேண்டும்
நிலத்தில் விழுந்து நெல்லாகவேண்டும்
கவிஞனில் விழுந்து கவிதையாகவேண்டும்

வேண்டுதல்களுடன் பூமியை
தொட்டு விழுந்த இடமோ
சேறு

தன் நிலையை
எண்ணி நொந்தது
மழைத்துளி

எங்கிருந்தோ வந்த
வாகனம் சேற்றை
அவள் மேல்
வீசிவிட்டு போக
கிட்டியது மோட்சம்.....

3 comments:

Anonymous said...

un kavidhaigalai padipathanal enakum kittuma motcham?

புதிய பரிதி said...
This comment has been removed by the author.
Anonymous said...

hi! Nice one

Post a Comment