Saturday, March 20, 2010

நீ வரும் வரிசை

மழை,நிலா எனத் தொடங்கி
பனித்துளி, மலர் என தொடர்ந்து
யானை, ரயில் என முடியும்
சலிக்காத விசயங்களின்
வரிசையில் நானும் ஒன்றா?
எனக் கேட்டாய் நீ

நீ நீ என தொடங்கி
நீ நீ என தொடர்ந்து
நீ நீ என முடியும்
வரிசையில் வருகிறாய்
நீ என்றேன் நான்

No comments:

Post a Comment