
இரயில் நிலையத்தில்
சந்திக்கும் பிச்சைக்காரனுக்கு
ஒரு ரூபாயை பையில் தேடி
ஐந்து ரூபாய் சிக்கியதால்
வருத்தத்துடன் நகர்கிறீர்களா?
ரோட்டில் அடிபட்டு
உயிருக்கு போராடும்
இளைஞருக்கு எவராவது
உதவவேண்டும் என
மனம் பதைக்கிறதா?
தமிழர்களை கொன்ற
இரக்கமற்ற இலங்கையிடம் இந்தியா
கிரிக்கெட்டில் தோற்றுவிட்டால்
கோபம் வருகிறதா?
விவசாயியின் தற்கொலை
செய்தியை படித்துவிட்டு
கண்ணில் வருத்தத்துடன்
சினிமா செய்தியை
நீங்கள் கவனிக்கிறீர்கள்?
வாங்கிய காசுக்காக
நேர்மையாய் அச்சின்னத்துக்கே
ஓட்டுபோட்டு உங்கள்
ஜனநாயக கடமையை
நிரைவேற்றுகிறீர்களா?
இப்போதெல்லாம்
நீங்கள்தான் நல்லவர்கள்
No comments:
Post a Comment