Saturday, April 10, 2010

கட்டங்கள் அற்ற சதுரங்கம்


நானும்
என் மனைவியும்
சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தோம்

அவளுக்கு கருப்புகாய்கள்
எனக்கு வெள்ளைகாய்கள்

அவள் ஆசை மகளும்
என் ஆசை மகனும்
அருகில் வந்தமர்ந்தனர்

எங்களது ஆட்டத்தில்
வெட்டுப்பட்ட காய்கள்
எல்லாம் அவர்கள்
ஆட்டத்தில் இடம்பெற்றன

என் மனைவியின்
யானையைக் கொன்றேன்
மகளுக்கு யாணை கிடைத்தது
குதிரையை கொன்றேன்
குதிரை கிடைத்தது
சிப்பாய்களைக் கொன்றேன்
சிப்பாய்கள் கிடைத்தார்கள்

என்னுடைய வெட்டுப்பட்ட-சில
காய்கள் எல்லாம்
மகன்வசம் இருந்தன

ராணியைத் தவிர
எல்லாக் காய்களையும்
இழந்துவிட்ட என் மனைவி

ராணியை பேருக்கு
வைத்துக் கொண்டு
ஒப்பேற்றினால்

ஆட்டம் வெகுநேரம்
நீடித்தது

பொறுமை இழந்த
மகள் ஒரு
கல்லை ராஜாவாக்கிவிட்டு
தானே ராணியாகிவிட்டாள்

இப்பொழுது மகனின்
கோபம் எல்லாம்
என்மீது இருந்தன....

1 comment:

Maivizhi said...

really meaningful da nice

Post a Comment