Saturday, April 17, 2010

தூக்கம் எனும் அதிசயம்


நாம் ஒவ்வொரு முறை
தூங்கும் போதும்-நம்
உயிர் வெளியே உலாவிவிட்டு
வரும் என தாத்தா
சொல்லுவார்..

பாட்டியின் கதையில்
இளவரசனை தூங்கும்போது
தேவதைகள் வானுக்குத்
தூக்கிச்சென்று சொர்க்கத்தில்
விளையாடுவார்கள்;

தான் தூங்கிக் கொண்டிருந்தபோது
என்னை கடவுள்
தன் வயிற்றில்
வைத்துச் சென்றதாக
ஐந்து வயதில்
அம்மா சொன்னாள்

பிரியாவின் தாத்தா
தூங்கிக் கொண்டிருந்த போதே
இறந்து விட்டார் என
அன்று ஒரு நாள்
சொன்னாள்

விழித்துக் கொண்டு
கனவு காண்பவனை விட
தூங்குபவனே கனவுளகத்துக்கு
அரசனாகிறான்

இப்படி அதிசயம்
நடக்கும் போது
எல்லாம் தூங்கி விடுகிறோம்
அல்லது- நாம்
தூங்கும்போது அதிசியங்கள்
நிகழ்ந்துவிடுகின்றன

No comments:

Post a Comment