வேலையில்லா
பேச்சுலர்களின் வாய்
கெட்டவார்த்தைகளால்
நிரம்பி வழிகின்றன
ஈழம் குறித்த
காணொலி பார்க்கையில்
ராஜபக்சேவுக்கு ஒரு கெட்டவார்த்தை
பெட்ரோல் இல்லாமல்
பாதியில் நிற்கும் வண்டிக்கு
அம்மா இல்லை என்றாலும்
அதே கெட்டவார்த்தை
குடை இல்லா நாளில்
பெய்யும் மழைக்கு
வேறொரு கெட்டவார்த்தை
விரக்தியின் போது-யாராவது
கடவுள் காப்பாற்றுவார் என்றால்
கடவுளையும் சேர்த்து ஒரு கெட்டவார்த்தை
காசில்லா போது
பசிக்கும் வயிற்றுக்கு உணவாய்
சில கெட்டவார்த்தைகள்
இப்படி
வாழ்கை கெடும்போதெல்லாம்
வார்த்தைகளும் கெடுகின்றன்
கடைசியில் ஒரு நாள்
பேச்சுலரும் கெட்டவார்த்தை
ஆகிவிடுகிறது.
No comments:
Post a Comment