நீ
குளிக்காத
மூன்றாவது நாளில்
வரும் நாற்றம்
சகிக்கமுடியாதது.
எல்லோரையும் போல்
மலமும் மூத்திரமும்
கழிக்கும் உயிரி
நீ.
ஜலதோசத்தின் போது
உன் நாசியில்
ஒழுகும் சளியும்
அதை உறிஞ்சும்போது
எழும் சத்தமும்
ஒவ்வாதவை.
எனக்கிருப்பதைப் போல்
மூளையும் இதயமும்
இரத்தமும் சதையும்
கொண்ட சாதாரண மனுஷி நீ...
உன்னைச்
சாதாரண மனுஷி
என எழுதுவதற்குள்
ஆயிரம்சவுக்கடி வாங்கியது
என் ஆம்பிளைத்தனம்..

No comments:
Post a Comment