Saturday, June 2, 2012

விழித்திருந்த ஓர் இரவு


கடிகார முள் சத்தத்தில்
இடிந்து கொண்டிருக்கிறது
என் பின்னிரவு

தினமும் ஏதேனு
ஒரு மரணம் -என்
இரவுஅறையில் நிகழ்ந்துவிடுகிறது
காலில் கடித்த கொசுவோ-இல்லை
கண்ட இடத்தில் கடித்த எறும்போ..

மின்விளக்கின் வயிற்றெரிச்சல்
பார்த்து சிரிக்கின்றன
மெழுகுவர்த்திகள்

இரவில்
நிலவோ மழையோ
ஏதேனும் ஒன்றை
இழக்கவேண்டி இருக்கிறது

இவ்வேளையில் ஏதேனும்
இரண்டு தவளைகள்
புணர்ந்து கொண்டிருக்கலாம்.
மலர் ஒன்று
மலர்ந்து கொண்டிருக்கலாம்
நான் மட்டும்..

ஒரு நிமிடம்
"த்தா டே நாளைக்கு எனக்கு பரிட்ச்சை டா"

(தேர்வுக்கு முந்தய இரவு எழுதியது... இப்படித்தான் இது முடியும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை)

No comments:

Post a Comment