Sunday, June 3, 2012

ஓர் இரவுப் பாடல்


(முன் குறிப்பு: இது கவிதை இல்லை...ஒரு நாள் இரவு ஒற்றை கிட்டாரை எடுத்துக் கொண்டு தோழியிடம் வாய் வந்த மாதிரி பாடியது)

உன்னிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை
நான் நினைத்துக் கொள்கிறேன்.
உன் அலை பேசி பழுது
சிக்னல் இல்லை
அல்லது என் அலைபேசி பழுது....


நீ சரியான நேரத்துக்கு வரவில்லை.
நான் நினைத்துக் கொள்கிறேன்.
உன் வண்டி பழுது
டிராஃபிக் அதிகம்
என் கடிகாரம் கோளாறு..

உன் வீட்டுக்கு அழைப்பதில்லை
நான் நினைத்துக் கொள்கிறேன்
எதற்கு அலைச்சல்
எதற்கு செலவு - என நீ நினைக்கலாம்
உன் வீட்டு நாய் கடிக்குமாய் இருக்கும்..

நான் பாடிக்கொண்டே இருக்கேன்..
நீ பாராட்டாமல் போகிறாய்..
நான் நினைத்துக் கொள்கிறேன்...
எனக்கு செவிடு என்று.........

No comments:

Post a Comment