Thursday, January 10, 2013

நான் அமீபாவாய் இருக்கிறேன்.

நான்
அமீபாவாய் இருக்கிறேன்.



எதிர்படுபவையை எல்லாம்
உண்டும்
செரித்தும்
கழித்தும்
வாழ்கிறேன் .

சகா கிடைத்த
மழை நாளில்
புணர்ந்தும்,
கிடைக்கா
நாள் ஒன்றில்
பிரிந்தும் - என்னைப்
பெருக்கிக்கொள்கிறேன் .


உணர்கொம்பில்லாத
என்னை எள்ளிநகையாடும்
உங்கள் கேலிகளை
உங்களுக்கு இருப்பதாய்
நம்பும் உங்கள்
அறியாமையால் புறந்தள்ளுகிறேன்.

உங்களைக் காண
வல்லமை பொருந்திய
நுண்ணோக்கி ஒன்றை
தயார் செய்து கொள்கிறேன்.
.

நீங்கள் எல்லாம்
மனிதராய் வாழும்
இப் பொன் உலகில்
நல்லவேளை -நான்
அமீபாவாய் இருக்கிறேன்.

No comments:

Post a Comment