Sunday, January 6, 2013

ஆதலால்


இங்கே எனக்கான மது இருக்கிறது
அதன் நுரைகள்
கடலலையில் இருந்து எடுக்கப்பட்டவை...


இங்கே எனக்கான காதலி இருக்கிறாள்
அவள் கற்பு
உடைக்கமுடியாதது என்று நம்புகிறேன்..


இங்கே எனக்கு தோழி இருக்கிறாள்
அவளது கையில்
ஒரு தேநீர் கோப்பை இருக்கிறது....


இங்கே எனக்கு அழகான விரிப்பும்
போர்த்திக் கொள்ள
இறந்த மிருகத்தின் தோலும் உள்ளது...


இங்கே எனக்கு ஒரு சிகரட் இருக்கிறது
ஒன்றாய் பற்றவைக்க
என்னுயிர் தோழன் இருக்கிறான்....

ஆதலால் மக்களே
மழை ரம்மியமானது
அதைப் பற்றி கவிதை எழுதாதவன் பாவி...

இது எல்லாம் உங்களுக்கு இருந்தும்
இதைப் படிக்காத நீங்கள்
மகா பாவி....

No comments:

Post a Comment