தேநீர் ஊற்றிவைக்கிறேன்
காத்திருத்தல் அதை
ஆற்றிவிடுகிறது..
பிறகு தேர்ந்தெடுத்த
கொட்டைகளை அரைத்து
கருப்புக் காப்பி தயாரிக்கிறேன்
உனது ஞஞ்ஞை
அதை மேலும் கசப்பாக்கிவிட்டது...
கடைசியாய் மதுவை
குவளையில் நிரப்புகிறேன்
ஆறிப்போவதற்கும்
கசந்து போவதற்கும்
அவசியமில்லாமல்
இருக்கிறது அது.

No comments:
Post a Comment