Monday, June 22, 2015

நினைவு மயக்கம்

எழுதி வைக்காத
ஒரு கவிதையைப் போல
நீ என் நினைவில் இருந்து
மங்கிப் போய்விட்டாய்..

எவ்வளவு யோசித்தும்
என்ன சொல்
என்ன வரி
என்ன கரு
எதுவும் நினைவில் இல்லை..

எனக்கு இருப்பது எல்லாம்
ஒரு கவிதை என்னுள் இருந்தது
என்கிற நினைவு
மட்டுமே.

No comments:

Post a Comment