Monday, June 22, 2015

பிரியமானவர்களின் அவதூறு

உங்கள் பிரியத்துக்குரியவரிடம் இருந்து
ஒரு அவதூறை எதிர்கொள்வது
என்பது சண்டையிடாமல்
பிரிந்து போன காதலியை
எதிர்கொள்வதற்கு சமானம்.

அதை நோக்கிப்
போலியாக புன்னகைக்காதீர்கள்.

காணாதது போல்
கடந்து செல்ல முயலாதீர்கள்.

அதன் கடந்தகாலம் பற்றிய
ஆராய்ச்சிகளை கைவிடுங்கள்.

அதன் நிகழ்காலத்தை
விளக்கவோ விளங்கிக் கொள்ளவோ
முற்படாதீர்கள்.

ஒரு நல்ல கனவு
முடிந்து போனதற்கு துயரப்படுவது
போல் துயரப்படுங்கள்.
முடிந்தால் அழுதுவிடுங்கள்
ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை.

இத்தனை காலமும்
பழைய காதலியைத்
தற்செயலாக சந்திப்பதற்கு
நீங்கள் காத்திருந்ததைப் போல்
உங்கள் பிரியத்துக்குரியவர்
அவதூறை நம்பக்காத்திருந்தார்
என்பதை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment