கானல் நீர் மேலோட
என்பிலாதவை உயிர் காய
என்றூழ் திறம் போக
சாலையை மீண்டும்
தாராக்கும் முனைப்புடன்
தகதகத்துக் கொண்டிருந்தது
கோடை.
தனலாய் தகிக்கும் வெயிலோடு,
தன்விலா தாங்கா கனத்தில்
தொங்கும் வேழவயிறும் தூக்கி
பாட்டையைக் கடக்கும் பொருட்டு
வெப்பக்காற்றில் தாவித் திரிகிறது
ஒரு பிலவம்.
கண்ணிலா பெருநகர வாகனங்கள்
எண்ணிலா கணக்கில் ஓடி
செல்லும் வழியெங்கும்
கரியமிலம் உமிழ்ந்து
வளி மறைக்க;
பொருமுகிறது
நகரம்.
காலனின் தேர்க்காலாய்
சக்கரங்கள் சுழன்று வந்து
மையத்தை எட்டிவிட்ட - பிலவத்தின்
மைய்ய அச்சில் ஏறிவிட
குடல் தள்ளிச்
செத்தது அப்பிலவம்.
செத்த பிலவத்தை உண்ண
ஆதுரக் காகம் ஒன்று
ஆவலாய் வரும் வேளையில்
ஆயிரம் சக்கரங்களைக்
கொண்ட ஊர்திகள்
இடைவிடாமல் ஊர்ந்தன
பிலவத்தின் உடலில்.
உண்ணதகா உணவென்றான பின்பும்
வெஃகல் அடங்கா காக்கை
நைந்துவிட்ட பிலவத்தின் பிரேதத்தையே
வட்டமிட்டு பறக்கிறது.
என் காதல் கதை கேட்டோரே
காகம் நானே
என்பிலாதவை உயிர் காய
என்றூழ் திறம் போக
சாலையை மீண்டும்
தாராக்கும் முனைப்புடன்
தகதகத்துக் கொண்டிருந்தது
கோடை.
தனலாய் தகிக்கும் வெயிலோடு,
தன்விலா தாங்கா கனத்தில்
தொங்கும் வேழவயிறும் தூக்கி
பாட்டையைக் கடக்கும் பொருட்டு
வெப்பக்காற்றில் தாவித் திரிகிறது
ஒரு பிலவம்.
கண்ணிலா பெருநகர வாகனங்கள்
எண்ணிலா கணக்கில் ஓடி
செல்லும் வழியெங்கும்
கரியமிலம் உமிழ்ந்து
வளி மறைக்க;
பொருமுகிறது
நகரம்.
காலனின் தேர்க்காலாய்
சக்கரங்கள் சுழன்று வந்து
மையத்தை எட்டிவிட்ட - பிலவத்தின்
மைய்ய அச்சில் ஏறிவிட
குடல் தள்ளிச்
செத்தது அப்பிலவம்.
செத்த பிலவத்தை உண்ண
ஆதுரக் காகம் ஒன்று
ஆவலாய் வரும் வேளையில்
ஆயிரம் சக்கரங்களைக்
கொண்ட ஊர்திகள்
இடைவிடாமல் ஊர்ந்தன
பிலவத்தின் உடலில்.
உண்ணதகா உணவென்றான பின்பும்
வெஃகல் அடங்கா காக்கை
நைந்துவிட்ட பிலவத்தின் பிரேதத்தையே
வட்டமிட்டு பறக்கிறது.
என் காதல் கதை கேட்டோரே
காகம் நானே
No comments:
Post a Comment