Saturday, June 26, 2010

என்னதான் இருந்தாலும்...

நண்பர்களே உங்களுக்கு சிவமுத்துமாணிக்கம் தெரியுமா? தெரிந்திருக்கும். இல்லை என்றால் சொல்கிறேன் தெரிந்துகொள்ளுங்கள். அவர் ஒரு பணக்கார முற்போக்குவாதி.அவர் தன் மனைவியை கூட மரியாதையாக `வாங்க போங்க` என்றுதான் அழைப்பார்.இதற்கு மேல் அவர் பெண் அடிமைதனத்தை வெறுப்பவர் என்பதற்கு எடுத்துக்காட்டு இருக்கமுடியாது.

காலையில் எழுந்து கடவுளை வணங்கிய பின் தான் மற்ற காரியம் செய்வார். சிவமுத்துமாணிக்கம் நெற்றி நிறைய விபூதி ,நடுவில் வட்டமாக சந்தனப் பொட்டு, அதன் நடுவில் குங்குமம் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டுக் கொண்டு கம்பீரமாக இருப்பார், என நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.

அவர் கருப்புச் சட்டையுடனும் வெள்ளை பேன்டுடனுனும் வலம் வருவார்.அவர் ஒரு சுத்தமான பெரியாரியவாதி.கடவுளை வணங்குகிறார் பெரியார்வாதியா? இங்கு சற்று விளக்கம் தேவை என எண்ணுகிறேன் கடவுள் என்பது அவரது தந்தையின் பெயர் விளங்கிவிட்டதா? அவரது குடும்பத்தைப் பற்றி பார்ப்போம்.அவருக்கு ஒரே மனைவி அய்யம்மாள் இரண்டு மகன்கள் முத்தவன் கதிரவன் இளையவன் சூரியன். சிவமுத்துமாணிக்கம் தன் முற்போக்கை வீட்டிலும் கடைபிடிக்கும் ஒருசிலரில் ஒருவர் ஒருநாள் அவர் மனைவி

`பூனை குறுக்கப் போகுது பொருத்துப் போங்க` என்றார்

அதற்கு அவர்

`இங்க பாருங்க பூனை புலி சிறுத்தை எல்லாம் ஒரே இனம் இவை எல்லாம் குறுக்க போனவுடனே போகாது கொஞ்ச நேரம் காத்து இருந்துட்டு தான் போகும் அந்தக் காலத்துல காட்டு வழியா போரவங்களை புலி சிறுத்தைக் கிட்ட இருந்து காப்பாத்துரதுக்கு அப்படி சொன்னாங்க அதப் போய் இப்ப சொல்லிக்கிட்டு.......` என்றார்

இவ்வளவும் சொல்லும் நான் யார்? என்று நீங்கள் கேட்கலாம் எனக்கும் இந்த குடுபத்துக்கும் என்ன சம்மந்தம் ? என்று கேட்கலாம். கேட்காது விட்டாலும் நான் சொல்கிறேன். என் பெயர் ராஜா என்னை என் தாய் இந்த வீட்டில் தங்கியிருந்தபோது என்னை பிரசவித்து விட்டு இறந்து விட்டாள்.என்னுடன் அண்ணன் ஒருவனும் பிறந்தானாம் பிறந்தவுடனே அவன் இறந்துவிட்டான் மிச்சம் நான் மட்டுமே என்னை தன் குழந்தை போல் வளர்த்தார்கள் எனக்கென தனி அறை வேற கட்டித்தந்தார். அவர் தன் மகன்களைப் போல் என்னை பாதுகாப்பார்.

ஒருமுறை நான் மிகவும் சிறுவயதாய் இருக்கும் போது மாணிக்கம் ஐயா கொடுத்த பிஸ்கெட்டை உண்டு கொண்டிருந்தேன் அப்போது அதை கதிரவன் என்னிடம் இருந்து பிடிங்கினான் நான் என்னையே அறியாமல் கடித்து வைத்துவிட்டேன்.அழுது கொண்டே கதிரவன் தந்தையிடம் சொன்னான். என்னதான் சிறுவயது என்றாலும் பாரபட்சம் பார்க்காமல் வளர்த்தாலும் தன் மகனுக்கு ஒன்று என்றால் எல்லாத் தந்தைக்குமே கோபம் வரும் அதுவும் பல் பதியுமளவுக்கு கடித்து வைத்திருக்கிறேன்.அவ்வளவு தான் இனி இவ்வீட்டில் இடம் கிடையாது என்று நான் நினைத்தேன் ஆனால் அவரோ தன் மகனின் தவரை சுட்டிக் காட்டினார்.அதில் இருந்து மூத்த மகனுக்கு என்னை பிடிக்காது. இளையமகனும் வெறுத்தான் அதன் காரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்.

ஒரு நாள் எல்லோரும் சுற்றுலா செல்ல முடிவெடுத்தார்கள்.அவர்கள் காரில் செல்லும் போது நானும் தாவி ஏறிக் கொண்டேன்

`இந்த நாய் எல்லாம் நம்ம கூட வருதாக்கும் ச்சீ கீழ இறங்கு` என்று கத்தினான்.

`வந்தா வரட்டும் நீ பேசாம இருப்பா`என்றார்

அதிலிருந்து அவனுக்கு என்னைப் பிடிக்காது வருடங்கள் ஓடின.சிவமுத்து மாணிக்கம் நொடிந்து போனார்.அவர் மகன்கள் கல்யாணம் முடித்து மருமகள்கள் வந்தார்களவர் ஒரு பொம்மை போல் வாழ்ந்தார்.நான் அங்கிருந்து துரத்தப் பட்டேன்.ஒரு நாள் சிவமுத்து மாணிக்கம் இறந்துவிட்டார் எனக் கேள்வி பட்டு அந்த வீட்டுப் பக்கம் போன போது பதினாறாம் நாள் கருமாதி .போனால் போகட்டும் என்று ஒரு ஓரமாக இலைல் சோறு போட்டனர்.சாப்பிடப்பிடிக்காமல் வந்து விட்டேன்.

`இந்த நாய்கெல்லாம் சோறு போட்டேன் பாரு.....` மூத்தமருமகள் பேசியது கேட்டும் கேட்காதது போல் வந்துவிட்டேன்.எப்பொதாவது நான் அந்த குடும்பத்தார்களை பார்ப்பேன் காரில் என்னை கண்டுகொள்ளாமல் போவார்கள்.என்னதான் இருந்தாலும் நான் நான்கு கால் நாய் தானே...

No comments:

Post a Comment