என் ஜன்னலின்
வழியே தினமும்
ஒரு வடிவத்தில் வருகின்றன
மழையே தராத
மலட்டு மேகங்கள்.
முதல் நாள் கொஞ்சம்
இசைக் குறிப்பைக் கொடுத்துவிட்டுச்
செல்லுமது அடுத்த நாளுக்கு
ஒரு நவீன ஓவியத்தை
ஒளித்து வைத்திருக்கிறது.
பின்பொரு நாள்
பெண்ணின் மனதாய்
அடர்ந்து வந்து
கழுத்தை நெரித்தாலும்
அடுத்த நாளிரவு
நிலவுக்கு பின்னணியாய்
வந்து வருடுகிறது
இப்போது
நான் மீண்டும் மீண்டும்
யோசித்து மாய்கிறேன்.
ஏன் இவை முதல் பத்தியில்
மலட்டு மேகங்கள்
என குறிக்கப்பட்டது என்று....
No comments:
Post a Comment