நீர் குமிழிக்கு உள்ளிருக்கும்
காற்றின் அடர்த்தியாய்
அழுந்தி பிரக்ஞையற்று
கிடந்தது ஏழைச்சமூகம்.
கொடுமைகளைக் காண
கண்கள் தந்தருளினார்.
முதலாளியின் காடு
காவல் காக்கப்பட்டது.
கேள்விக்காக கொடுத்த நாக்கும்
பேசாமலேயே இருந்ததால்
மரமாகிப் போனது
மரவட்டைகளாக முதலாளிகள்.
கயவர்களை அடையாளம் காட்ட
அவர்கள் நிறம் பரிக்கப்பட்டது.
அடிமைகளை சுலபமாக கண்டடைய முடிந்தது.
தப்பியோட கால்கள் வழங்கப்பட்டன.
தீமிதிப்பதற்கு என்று அறிவுருத்தப்பட்டது.
அடிப்பதற்கு கைளைப் பரிசளித்தார்
முதலாளிகளின் மலம் அள்ளப்பட்டது.
புதிதாய் வருபவன்
கொந்தளிப்பான் என
பிறப்புருப்பு செய்து வைத்தார்.
மேலும் கொஞ்சம்
அடிமைகள் கிடைத்தனர்.
இப்படித்தான் தோழர்களே !
அவர் கடைசிக்கடவுளாகவும்
முதல் கம்யூனிஸ்டாகவும்
ஆகிப் போனார்.
No comments:
Post a Comment