Sunday, July 7, 2013

சுயம்

1

என் விரல்கள்

உறைந்திருக்கின்றன

பனியா காரணம்?





2



நானும் போனபோது

நீ இருந்திருக்கலாம்.

நீயாவது...







3



நிலவுக் குமிழி

உடையும் தருணம்

வெண்ணலை..







4



தொடரும்...

தொடங்குகையில்

முற்றுப்புள்ளிகள்.





5

நீரின் விளிம்பில்

ஒட்டி நிற்கிறது

என் சுயம்

No comments:

Post a Comment